WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வுக்கு அழைப்பு

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர்வதற்காக நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2013 தேர்வு எழுத பிளஸ் 2 படித்த அறிவியல் குருப் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2014.

மொத்த காலியிடங்கள்:
42.

வயது:
1.1.2014 அன்று 17 லிருந்து 21க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1993க்கு முன்பாகவோ 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.

கல்வித்தகுதி:

கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது 2ம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பிஎஸ்சி முதல் அல்லது இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அதன் துணை வங்கிகளிலோ நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் 12.1.2014ல் நடைபெறும்.

பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பி.இ., (மெக்கானிக்கல்) பட்டம் பிர்லா இன்ஸ்ட்டி டியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ராவால் (ராஞ்சி) வழங்கப்படும். பயிற்சியின் போது முதல் 2 வருடங்கள் மாதம் ரூ.9,100 உத வித்தொகையும், மூன்றாம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டில் முதல் 6 மாதங்கள் மாதம் ரூ.9,400 உதவித்தொகையும், கடைசி 6 மாதங்கள் ரூ.9,700 உதவித் தொகையும் வழங்கப்படும். 4 வருட பயிற்சிக்குப்பின் ரயில்வேயில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.11.2013

ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வுக்கு அழைப்பு

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர்வதற்காக நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2013 தேர்வு எழுத பிளஸ் 2 படித்த அறிவியல் குருப் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2014.
மொத்த காலியிடங்கள்: 42.
வயது: 1.1.2014 அன்று 17 லிருந்து 21க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1993க்கு முன்பாகவோ 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது 2ம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பிஎஸ்சி முதல் அல்லது இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அதன் துணை வங்கிகளிலோ நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் 12.1.2014ல் நடைபெறும்.
பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பி.இ., (மெக்கானிக்கல்) பட்டம் பிர்லா இன்ஸ்ட்டி டியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ராவால் (ராஞ்சி) வழங்கப்படும். பயிற்சியின் போது முதல் 2 வருடங்கள் மாதம் ரூ.9,100 உத வித்தொகையும், மூன்றாம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டில் முதல் 6 மாதங்கள் மாதம் ரூ.9,400 உதவித்தொகையும், கடைசி 6 மாதங்கள் ரூ.9,700 உதவித் தொகையும் வழங்கப்படும். 4 வருட பயிற்சிக்குப்பின் ரயில்வேயில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள். 
கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.11.2013.

how to improve blood

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை  தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.  தினசரி இரவு  அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம்  விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால்  இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால்  இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.